சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
“ பெற்றோரே”

நடமாடும் தெய்வங்கள் நானிலத்தில் பெற்றோரே!
உடனிருந்து உரிமைதந்து ஊசலாடும் தெய்வங்களே!
கடமையென எண்ணாது கருணையுடன் அணைப்பவரே!
மடமைதனை அகற்றி மகிமைதனைப் புகட்டுபவரே!

எங்களின் பெற்றோரே ஏணியாக நிற்பவர்
தங்களது சுமையை தூசாக நினைப்பவர்
பங்கம் நேராது பவுத்திரம் காப்பவர்
சங்கத் தமிழின் சரித்திரம் சொல்பவர்

வாழ்வில் வசந்தம் வீசிடச் செய்பவர்
ஏழ்மையை விரட்டி ஏந்திக் காப்பவர்
கண்ணில் தெரியும் கடவுளர் பெற்றோரே!
கண்குளிரக் காலமெல்லாம் காக்கவேண்டும் பெற்றோரை…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading