கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பொங்கல் வருகுது

பொங்கல் வருகுது பொங்கல் வருகுது
பூரிப்பில் மனங்கள் புன்னகை சொரியுது
பொங்கி மகிழ புலத்திலும் ஆரவாரம்
புதுப்பானை வாங்கவும் புத்தாடை உடுத்தவும்

அங்காடி தேடியே அலைவார் எம்தமிழர்
அல்லல் ஒருபுற மதையொதுக்கி மறுபுறம்
பொங்கும் பொங்கலில் பூரிப் படைந்திடுவர்
பகலவன் வரவும் பட்டுத் தெறிக்க
பகலும் வந்துமே பனியும் அகலுமே

பங்கம் வாராது பகலவனை வேண்டி
பொங்கியும் வைத்து பாவும் பாடிடுவர்….

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading