ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாசலைத் தட்டுகிறது வசந்தம்

பறக்கும் புள்ளினங்கள் பரவசம் கொள்ள
பகலவன் விழிக்க பனிமூட்டம் கலைய
திறக்கிறது வாசலைத் தித்திப்பாய் வசந்தம்
துளிர்கள் மெல்லத் தளிர்விடப் பசுமை

இயற்கையின் பரிமாற்றம் இனிமையைத் தந்திட
எடுத்தாள முடியாது இருண்டபுகை மறைக்க
செயற்கைச் சாதனம் செயல்திறன் பெருக
சுகம்தரும் வசந்தம் சுமையென விழிக்க

காலங்கள் நகருது கலியுகத் திலின்று
கதிகலங்கி மாந்தர் கழித்திடும் வசந்தம்…..

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading