பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பழமை

வாழும் வாழ்வில் வசந்தம் பெறவே
வாழ்ந்தார் பழமையில் எழிலையும் கண்டே
கூட்டாய் இருந்து கூட்டாஞ் சொறுண்டு
கூடி மகிழ்ந்த பழம்பெரும் காலம்

மீட்டுப் பார்த்தால் மெய்யும் சிலிர்க்கும்
மீண்டும் வருமா அக்காலம் அதுவே
கிட்டிப் புல்லும் எட்டி அடிக்க
கிறுகிறுக்கும் மனமும் எட்டிப் பிடித்து

நினைக்க நினைக்க இனிக்கும் பழமை
நீண்ட கதையும் சொல்லிடப் பாட்டியும் இல்லை
பழங்கதை கேட்டிடப் பாலகர் களுக்கும் பொறுமை இல்லை….

Nada Mohan
Author: Nada Mohan