தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
புதுமை படைக்கும் புலத்துப் பெண்கள்

படைக்கின்றார் புதுமைகளைப் புலத்துப் பெண்கள்
தடைகளையும் உடைத்துமே தரணி சிறக்க
அடிமை விலங்கொழித்து அறிவை வெழிக்கொணர்ந்து
ஆற்றல் பீறிட அறங்களையும் புரிகின்றார்

விழிநீர் வடித்தாலும் வழிதேடிச் சென்றுமே
தொழில்த் துறைசார்ந்து தனித்திறமை படைக்கின்றார்
புலத்துப் பெண்கள் புதுமைப் பெண்களாய்
உலாவும் வருகின்றார் உரிமையுடன் நின்றுமே

புரிதல் நிறைந்தும் புவியினில் சிறந்தும்
விரிசல் வந்தாலும் வீண்வார்த்தை பேசாமல்
உரிமை கொண்டு அடிமை விலங்குடைத்து
உணர்வுடன் பணியை ஊக்கமுடன் நகர்த்துவார்.

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan