கோவில் திருவிழா

91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே
பல வளையல் கடைகளும் பெரும் ஐஸ்கிரீம் கடைகளும் காண கண் கேட்குமே
கோவிலில் சாம்புராணி ஊதுபத்தி நறுமணங்கள் இன்னும் தேடுமே
நாதஸ்வர மேள சத்தங்கள் இன்னும் மெருகூட்டி கோயிலை நாட செய்யுமே
கோவில் சாமியின் அலங்கார ஆடைகளும் நாம் போட்டு வந்த ஆடைகளும் ஒரே நிறத்தில் இருந்தால் பெரும் சந்தோசமே
ஒவ்வொரு நாட்களுக்கு ஒவ்வொரு அலங்காரத்துடன் திருவிழா முடிய கண்களும் கலங்குகின்றன நிலைக்காதா என
அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading