க.குமரன் ஆக்கம்102 (23.2.23)

வியாழன் கவி
ஆக்கம் 102

மண்

பத்தை படர்ந்த
தட்டாந்தரையை
வைகோ இயந்திரம்
ஒடி
குழி நிரவி

பிளேட்டு போட்டு
உழுது
நிலையம் எடுத்து
குழா்ய்கிணறு அடித்து

கொட்டில் போட்டு
மின் எடுத்து
வாழை மரவள்ளி
வெங்காயம் பூசணி போட்டு

மண்ணை நம்பி
நான் நிற்கிறேன்
மனிதரைப். போலே
ஏமாற்றாதே
நீயும மண்ணே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading