திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

க.குமரன்

சத்தம் சிந்தும்
வாரம் 247

விடுமுறை

விடுமுறை ஒன்று
தா தாயீ
புள்ளைகளோடு ஒரு
நாள் சேர்ந்து இருக்க
சனி ஞாயிறாக
தா தாயீ

சனியும் ஞாயிறும்
எனக்கு சொந்தம்
தருவது எப்படி
உனக்கு மட்டும்?

திங்கள் முதல்
வெள்ளி வரையில்
நாள் ஒன்னு கேளு
தருவேன் உனக்கு

தனித்து விடுமுறை
நான் எடுத்து
தனித்து வீட்டில்
இருப்பதும் ஏனோ?

சகலரும் கூடி
சந்தோசமா
எனக்கு ஒரு
விடுமுறை நாள்
தா தாயீ!

அடுக்களை பாத்திரம்
கூடும் நாளும்
ஆடைகள் குவியலை.
துவைக்கும் நாளும்
ஆகாதே உனக்கு
விடுமுறை தரவே !

வேண்டாத ஆசை
உனக்கு வந்தால்
வேலையை விட்டு
போவதே சாத்தியம்

போட்டாள் ஒரு போடு
பானையை!
பொத்தடி.வாயை
என்று !!!!

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading