க.குமரன்

சந்தம் சிந்தும
வாரம் 286

சூர வதை

வேண்டும் வரம் கேட்டு
வேண்டி வரம் பெற்றான்
மாயா வரம் பெற்று
பெற்ற வரத்தாலே
மமதை கொண்டான்
சூர பத்மன் !

அண்டங்கள் பல ஆண்டு
அடிமையாக்கிய தேவரை
மீண்டு வர வரம் தா !
சித்தமாண்ட சிவ தாண்டவா !

விமோசனம் ஏது ஆகுமோ ?
காரிகை கரு உருவாமல்
உருவாகும் மகவால்
காரியம் ஆகவேண்டும் அவனுக்கு !…

சத்திய உபஜாரம்
வாம தேவம்
தற்புருசம்
ஈசானம்
அகோரம்
அகமுகம் கொண்டு

தீப் பொறியாக
சரவணப் பொய்கையில்
ஆறு மகவு பெற்று

அரவனைப்பால்
ஆறு முகன்
கந்தனானன் !

ஆதி பராசக்தி
வேல் கொண்டு
நீ அஞ்சும் போது !
ஆறு முகனை நினை !!!…

ஐந்து சேனைகளை
ஐந்து நாளில் அழித்து
ஆறாம் நாள்
வேல் கொண்டு

சூரனைப் பிளந்து
வேலும் மயிலுமாக்கி
சிம்மாசனம் மயிலும்
கொடியேன சேவலுமானதே!

அசுரனை வென்ற
முருகா !
என்னை உருக்கி
எனக்கு அடைக்கலம் தருவான்

வேல் உண்டு காக்க
வினைகளை போக்க !…

நன்றி
க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan