பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும
வாரம் 286

சூர வதை

வேண்டும் வரம் கேட்டு
வேண்டி வரம் பெற்றான்
மாயா வரம் பெற்று
பெற்ற வரத்தாலே
மமதை கொண்டான்
சூர பத்மன் !

அண்டங்கள் பல ஆண்டு
அடிமையாக்கிய தேவரை
மீண்டு வர வரம் தா !
சித்தமாண்ட சிவ தாண்டவா !

விமோசனம் ஏது ஆகுமோ ?
காரிகை கரு உருவாமல்
உருவாகும் மகவால்
காரியம் ஆகவேண்டும் அவனுக்கு !…

சத்திய உபஜாரம்
வாம தேவம்
தற்புருசம்
ஈசானம்
அகோரம்
அகமுகம் கொண்டு

தீப் பொறியாக
சரவணப் பொய்கையில்
ஆறு மகவு பெற்று

அரவனைப்பால்
ஆறு முகன்
கந்தனானன் !

ஆதி பராசக்தி
வேல் கொண்டு
நீ அஞ்சும் போது !
ஆறு முகனை நினை !!!…

ஐந்து சேனைகளை
ஐந்து நாளில் அழித்து
ஆறாம் நாள்
வேல் கொண்டு

சூரனைப் பிளந்து
வேலும் மயிலுமாக்கி
சிம்மாசனம் மயிலும்
கொடியேன சேவலுமானதே!

அசுரனை வென்ற
முருகா !
என்னை உருக்கி
எனக்கு அடைக்கலம் தருவான்

வேல் உண்டு காக்க
வினைகளை போக்க !…

நன்றி
க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading