பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 118

“அகதி” நாம் பெற்ற வரமா?

அகதி
அர்த்தம் புரியமலேயே
அகன்று வந்த
ஐரோப்பா!

நாட்டில் பிரச்சனை
வேலை கிடைக்குமா
என கேட்டால்?!

ஏன் வந்தாய்?
உன் பிரச்சனை தான் என்ன?
என பல வினாக்கள்?

நிதர்சன உண்மைகளும்
அரிதாரம் பூசிய
வார்த்தைக் கோர்வைகளும்
வாழ்வு தந்தது!

ஆறுமாத. விசா
தந்து
அகதியாக முகப்பிரதியில்
முத்திரை குத்தி

நாட்களை ஓட்டி
நான் அகதியே
வாதாடி!
பெற்ற இந்த வாழ்க்கை

நினைவு இருக்கின்றதா?
நாம் பெற்ற வரம் என்று

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan