க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 231

அரச மரம்

நிழல் தரும்
அரச மரம்
நீதி தருமா
சொல் மனமே!

கதை சொல்லும்
வரலாற்றில்
பரிநிர்வாணம்
புத்தருக்கு
உனது அண்டை
தந்ததாலே!

பரந்த ஈழத்தில்
பார்க்கும்
இடமெல்லாம்
பௌத்த புத்தர்
சிலை வைத்து

உன் பாதம்
வைத்த இடமென்று
விகாரைகள்
உருவாகும்
விகார மனங்களை
காண்கின்றோம்

அகிம்சை அற்ற
ஆன்மீகம்
அதிருப்தி தரும்
தார்மீகம்

மண் காக்க
அரச மரத்தை
சாய்த்திடுவோமா
சொல். மனமே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading