சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
பங்கு நீ
காதலென்னும் கானம் என்
காதுகளில் கேட்கும்
காத்திருந்த காலம் என்
கண் வழியே போகும்

மீட்டி வரும் கீதம் அது
கேட்டு வரும் நேசம்
பாட்டிலொரு சோகம் அது
பாதை மாறிப் போகும்

ஓடும் அந்த மேகம் அது
தேடும் வண்ண‌ நிலவை
ராத்திரியின் இருளில் அவை
வழிமாறி அலையும்

ஆதவன் வருகையைத் தாமரை
பார்த்திருக்கும் ஆவலுடன்
பூத்திருக்க ஏங்கியொரு பொழுதில்
மாலையதின் கருக்கலில் மகிழ்ந்தே
மலர்ந்து விடும் அல்லி மதி வரவால்

சேர்த்திருந்த ஆசைகளைக் கூட்டி
பார்த்திருந்தேன் பூமகளைத் தேடி
கண்மணிகள் காய்ந்துவிடும் நிலையில்
பொன்மணியின் ஊர்கோலம் கண்டேன்
செவ்வாயில் மலர்ந்ததொரு புன்னகை
தேன்துளியாய் ஊறின உணர்வுகள்

கண்களுக்குள் காட்சிதனை மூடி
காற்றாகப் பறந்து விட்டேன்
கண்ணயரும் போழுதில் என் கனவில்
கலையாத ஓவியமாய் அவளும்
கவிவரிகள் நெஞ்சினிலே துள்ள‌
காலவரிகள் ஓவியங்கள் வரைய …

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading

    வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

    Continue reading