சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..

ரஜனி அன்ரன் (B.A) ...சூடு பிடிக்கிறது....09.07.2026 பச்சைப்புல்வெளி போர்க்களமாக பந்து மட்டும் ஆயுதமாக வீரர்கள் கால்களோ பம்பரமாக...

Continue reading

நடிப்பது மானிடம்!!!

தினக்கவி-2365 நடிப்பது மானிடம்..!! செய்வதெல்லாம் செய்துவிட்டு பொய் தான் உரைத்திடுவார் போதுமென்ற அளவிற்கு நாடகமாய் நடித்து வெல்லுவர் பச்சைப் பிள்ளை...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
பங்கு நீ
காதலென்னும் கானம் என்
காதுகளில் கேட்கும்
காத்திருந்த காலம் என்
கண் வழியே போகும்

மீட்டி வரும் கீதம் அது
கேட்டு வரும் நேசம்
பாட்டிலொரு சோகம் அது
பாதை மாறிப் போகும்

ஓடும் அந்த மேகம் அது
தேடும் வண்ண‌ நிலவை
ராத்திரியின் இருளில் அவை
வழிமாறி அலையும்

ஆதவன் வருகையைத் தாமரை
பார்த்திருக்கும் ஆவலுடன்
பூத்திருக்க ஏங்கியொரு பொழுதில்
மாலையதின் கருக்கலில் மகிழ்ந்தே
மலர்ந்து விடும் அல்லி மதி வரவால்

சேர்த்திருந்த ஆசைகளைக் கூட்டி
பார்த்திருந்தேன் பூமகளைத் தேடி
கண்மணிகள் காய்ந்துவிடும் நிலையில்
பொன்மணியின் ஊர்கோலம் கண்டேன்
செவ்வாயில் மலர்ந்ததொரு புன்னகை
தேன்துளியாய் ஊறின உணர்வுகள்

கண்களுக்குள் காட்சிதனை மூடி
காற்றாகப் பறந்து விட்டேன்
கண்ணயரும் போழுதில் என் கனவில்
கலையாத ஓவியமாய் அவளும்
கவிவரிகள் நெஞ்சினிலே துள்ள‌
காலவரிகள் ஓவியங்கள் வரைய …

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading