பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சக்தி சக்திதாசன்

“மொழி” ச.சி.சந்திப்பு 212
இத்தரை மீதினில் நாம் கண்டோம்
எத்தனை மொழிகள் அறிவோமோ ?
அத்தனை மொழிகளிலும் தனியாய்
முத்திரை பதித்ததெம் தமிழ்மொழியே !

தைத்திருநாளில் நல்வழி கொண்டு
தையலவள் நடைபோட்டு வந்திடுவாள்
சித்திரைத் திங்களதில் புதுக்கோலம்
இத்தரையில் பூண்டே நடமாடிடுவாள்

கம்பனவன் சொல்சேர்த்துக் கவிபுனைந்து
கற்பிக்கும் சொற்சிலம்பம் தனை சிறப்பிக்கும்
கண்ணான மொழியெங்கள் தமிழென்பேன்
கண்மூடும் வேளையிலும் கனவாக்கி மகிழ்ந்திடுவேன்

இளங்கோ, பாரதி, பாரதிதாசன் தம்பாக்கள்
இசைத்து மகிழ்ந்த இனியமொழி எம் தாய்மொழி
கவியரசர், வாலி , பட்டுக்கோட்டையார் என
கவிசூடி தமை மறந்து களித்த மொழி எம்மொழியே !

தமிழென்னும் பூவெடுத்து கவிமாலை தொடுத்திட்ட
தனயர் பூவை செங்குட்டுவன், வைரமுத்து என
தமிழன்னை தாலாட்டி வளர்த்த பல கவிஞர்
தாய்மொழியாம் தமிழோடு விளையாடி மகிழ்ந்தனரே

அன்னைத் தமிழ்மொழியே ! அன்புத் தாய்மொழியே !
அகிலத்தில் அணையாப் புகழ் கொண்ட செம்மொழியே !
என்னெஞ்சில் நீ புகுந்து என்னுள்ளம் நிறைத்தனை
என்னினிய தாய்மொழியே ! உன் பாதம் பணிகிறேன்

வணக்கத்துடன்
சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading