சக்தி சக்திதாசன்

உருளும் உலகம்
உறங்கும் இதயம்
உண்மை உதயம்
உணர்வுகள் புதையும்

நினைவுகள் விரியும்
நிதர்சனம் புரியும்
நீளமாய்த் தெரியும்
நடப்பதை அறியும்

காலத்தின் ஓட்டம்
கனவினில் ஆட்டம்
ஆனந்தத் தோட்டம்
அறிவிலர் கூட்டம்

விதைப்பது யாரோ
வளர்ப்பவர் யாரோ
அறுப்பவர் யாரோ
அறிந்தவர் யாரோ

வாழ்க்கையின் ரகசியம்
விளங்கிடின் அதிசயம்
இகத்தினில் பலரகம்
இறுதியில் ஒரேரகம்

இயம்பிடில் சத்தியம்
இன்பந்தான் நித்தியம்
இதயத்தின் சுத்தமே
இகப்பரம சித்தமே

பிறப்பினில் ஆன்மா
இறப்பிலும் ஆன்மா
இடையினில் காண்பது
இடையறா மாயையே

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading