19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
சக்தி சக்திதாசன்
என்னைப் பற்றிய
எனது குறிப்புகளை
எங்கோ தொலைத்து விட்டேன்
எழுத்து எனும் வெளிச்சத்திடு
என்னைத் தேடிக் கொண்டே !
முன்னை ஒரு பிறப்பில்
என்னைக் கண்டதாக
சொன்ன ஒருவரின்
சொற்களுக்குள் நானெங்கோ
சிக்கியிருக்கிறேனோ ?
விண்ணை நோக்கினேன்
விசாலமாய் ஒரு உருவம்
விளக்கியது வாழ்க்கைக் கோலத்தை
வித்தியாசமானவனல்ல நீ !
விசித்திரமான ஒரு அறிவுக்குருடனே !
நின்னைப் புரிந்திடாமல்
நிந்தன் பாத்திரத்தைக் அறிந்திடாமல்
வேடம் கலைந்து விட்டால்
ஏதுமற்ற ஓர் ஆன்மா எனப் புரியாத
ஞானச்சூனியத்துள் புதைந்தவனே நீ !
சொன்ன விளக்கங்களால்
என்னுள் புரளுகின்ற
எண்ண அலைகளினுள்
மிதக்கும் படகாக தெரிவதொன்றே
மீதமிங்கு ஆன்மாவென்பதுவே !
எழுத்துகள் முடிவதில்லை
எண்ணங்கள் ஓய்வதில்லை
எந்தன் தேடல்கள் மாய்வதில்லை
உணர்ந்ததை எழுத்தாக்கித் தாளில்
உண்மையை வடித்திடுவேன்
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...