சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 239 கவியரசர் கண்ணதாசன்
கலைத்தாயின் பெருமைந்தன்
சிலையாக்கும் சிற்பியைப்போல்
சிறப்பான கவிவடித்தார்

முத்தான எழுத்துகள்
முத்தமிழின் வனப்பாக
முத்தையா வடித்ததினால்
முத்தெனவே மிளிர்கின்றார்

கவிதைகள் ஓராயிரம்
கட்டுரைகள் ஓராயிரம்
காவியங்கள் பலநூறு
கவியரசர் படைத்திட்டார்

அரசியலில் வனவாசம்
ஆன்மீகத்தில் மனவாசம்
அர்த்தமுள்ள இந்துமதம்
அத்தனையும் முத்துக்கள்

கவியரசர் நினைவுவாரம்
கவிமாலை நான்கிதுவே
கவித்துவத்து அஞ்சலிகள்
கண்மூடித் துதிக்கின்றேன்

அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading