20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சக்தி சக்திதாசன்
“வேள்வி.
சந்தம் சிந்தும் சந்திப்பு. உள்ளத்தின் உணர்வுகள்
உகுக்கின்ற கேள்விகள்
வெள்ளாமாய்ப் பெருகியே
வேள்வியாய் கிளர்ந்தன
சத்தியத்தின் சாட்சியாய்
நித்தியமும் சோதனைகள்
மொத்தமாய்க் கணக்கிட்டால்
அத்தனையும் சாதனைகள்
சித்தர்களின் கூற்றுப்படி
இத்தரையின் பிறப்புகள்
முத்திரையின் நாடகத்தின்
சித்திரத்துக் காட்சிகளாம்
செல்வமாய் எம்மிடத்தில்
செழித்திடும் அனுபவங்கள்
சொல்லிடும் பாடங்கள்
சேர்ந்திடுமெம் ஆன்மாவை
கற்றவை கற்றபின்னால்
நிற்பது அதற்குத்தகுமாமோ
சொற்சுவை கூட்டியன்று
சொல்லிய வள்ளுவர்
தெரிந்தவை தெரிந்தபின்
புரிந்தவை புரிந்தபின்
அறிந்தவை எச்சமாய்
எரிந்ததெம் சாம்பலில்
உடலினைக் களைந்தபின்
உயிரது பிரிந்தபின்
ஆன்ம உலகினிலே
அடுத்ததோர் பயணமோ ?
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
24
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
வரலாறு பலபாகம்
வழிகூறும் பலகாலம்
தமிழ்ப்பள்ளி உருவாக்கம்
தரணிக்கே தனிமகுடம்
உறவுகள் ஓன்றாகும்
உயிர்ப்பு மொழி தமிழாகும்
அடுத்த தலைமுறையும்...
24
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-02-202
ஆங்கிலம் பேசும் தேசத்தில்
அன்னைத் தமிழ் ஒலிக்கிறது
அள்ளித் தந்த தமிழ்ப்பள்ளிக்கு
அனந்த...
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...