21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
சக்தி சக்திதாசன்
“வேள்வி.
சந்தம் சிந்தும் சந்திப்பு. உள்ளத்தின் உணர்வுகள்
உகுக்கின்ற கேள்விகள்
வெள்ளாமாய்ப் பெருகியே
வேள்வியாய் கிளர்ந்தன
சத்தியத்தின் சாட்சியாய்
நித்தியமும் சோதனைகள்
மொத்தமாய்க் கணக்கிட்டால்
அத்தனையும் சாதனைகள்
சித்தர்களின் கூற்றுப்படி
இத்தரையின் பிறப்புகள்
முத்திரையின் நாடகத்தின்
சித்திரத்துக் காட்சிகளாம்
செல்வமாய் எம்மிடத்தில்
செழித்திடும் அனுபவங்கள்
சொல்லிடும் பாடங்கள்
சேர்ந்திடுமெம் ஆன்மாவை
கற்றவை கற்றபின்னால்
நிற்பது அதற்குத்தகுமாமோ
சொற்சுவை கூட்டியன்று
சொல்லிய வள்ளுவர்
தெரிந்தவை தெரிந்தபின்
புரிந்தவை புரிந்தபின்
அறிந்தவை எச்சமாய்
எரிந்ததெம் சாம்பலில்
உடலினைக் களைந்தபின்
உயிரது பிரிந்தபின்
ஆன்ம உலகினிலே
அடுத்ததோர் பயணமோ ?
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...