” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

பெண்ணே நீயொளிரும் விளக்கு
உந்தன் பெருமையினை விளக்கு
நிந்தன் இடர்களெல்லாம் விலக்கு
முந்துமுன் திறமைகளை துலக்கு

பெண்ணே சரித்திரம் படைப்பாய்
மூடர்தம் சாத்திரம் உடைப்பாய்
ஊழ்வினை என்பதைத் தகர்ப்பாய்
வாழ்வினில் இலக்கினை ஜெயிப்பாய்

பெண்ணே நீயொரு ஆன்மா
கண்டதும் மாண்புடை ஜென்மா
தாய்மையைப் போலவே வருமா ?
அன்பினை உனைப்போல் தருமா ?

பெண்ணே விலங்கினை உடைத்து
மண்ணில் பெருமைபல படைத்து
விண்ணில் கொடியினை உயர்த்து
உலகினை உறுதியினால் ஜெயித்து

பெண்ணே பேதைகளென்பதை மாற்று
மனிதத்துவ மாண்புகளை சாற்று
பாரெங்கும் நீதிவிளக்கினை ஏற்று
பாவையரும்மை அடிமைசெய்தது நேற்று

பெண்ணே தாய்மையின் வடிவமாய்
பெருமை தன்னகத்தினில் மொத்தமாய்
பொறுமையில் பூமியின் சின்னமாய்
என்றுமே வென்றிடுவாய் காலம்காலமாய்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan