கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

சக்தி சக்திதாசன்

உள்ளத்தில் ஊறும்
உணர்வுகளும் மாறும்
உன்னத வேளையிலே
உறுதிகளும் குலையும்

உறவுகளின் கோலம்
உருக்குலையும் காலம்
உதிருகின்ற முட்களாய்
உறுத்துமந்தக் கணங்கள்

பள்ளந்தனை நாடியே
வெள்ளமென ஓடிடும்
கள்ளமற்ற நெஞ்சின்
குள்ளமற்ற வெண்மை

கடந்துவிட்ட காலத்தில்
நடந்துவிட்ட நிகழ்வுகள்
புரிந்தவொரு வேளையில்
தெரிந்தசில உண்மைகள்

விதைத்ததந்த வினைகளவை
விளைந்துவந்த போதப்போ
வதைத்தந்த நினைவுகளுள்
புதைந்துபோன வேதனைகள்

சத்தியத்தின் சோதனைகள்
நித்தியமாய் வாழ்க்கையிலே
சுற்றியுள்ள திரைகளெம்மை
பற்றிக்கொண்ட மாயைகள்

உடலென்றும் நிலையல்ல
உள்மனமும் நிஜமல்ல
உண்மையெங்கள் ஆன்மாவே
உணர்ந்திட்டால் அமைதிதானே

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading