” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
பயணம் போகின்றோம் அந்தப்
பாதையோர் நெடுஞ்சாலைதான்
துகள்களாய்ச் சிதறிய நெஞ்சம்
தூரத்தே தெரிவதும் நிழல்தான்

சேற்றினில் மலர்ந்திடும் செந்தாமரை
சேர்ந்திடும் ஆண்டவன் ஆலயத்தை
அழகாய் மலர்ந்திடும் தாழம்பூ
அதற்ல்லை இறைவன் திருவடி

தீபத்தின் ஒளியில் கற்கலாம்
தீபமேயொரு இல்லத்தை எரிக்கலாம்
ஏற்றிடும் தீபம் ஒன்றேதான்
ஏந்திடும் கரங்களே வேறுவேறு

விடியல்களைத் தேடி நடக்கிறோம்
விடிந்தும் மனதில் இருளிருக்கு
முடிந்த கதைகள் தொடர்வதில்லை
முடிவறிந்தும் ஏனோ புரிவதில்லை

வானத்தில் இருக்கும் அன்னை
வடியும் கண்ணீரோ தாரையாய்
ஞானத்தில் மூழ்கிய தந்தையவர்
மெளனத்தின் உண்மை சாட்சியாய்

காற்றடித்துக் கலையும் மேகமாய்
நேற்ற‌டித்த வார்த்தைச் சாரத்தினாலே
தோற்கவில்லை நேரான நெஞ்சம்
போற்றுகிறேன் அடைந்த அனுபவத்தை

வீழ்ந்து விடுவேன்று நினைத்தாயோ
வீரமாய்க் கூவிய பாரதிப்பாட்டன்
வாழ்க்கையும் அவ்வழியில் தானே
வீழமாட்டேன் தமிழ் உள்ளவரை

சேர்ந்திடும் மனத்துளிக் கணங்கள்
பூசிடும் அன்பெனும் பசையையே
மலர்ந்திடும் மனதில் மகிழ்வுணர்வு
மிதந்திடும் தமிழ்வானில் பறவையாய்

உள்ளத்தின் ஆழத்தில் ஏதேதோ
உரசிடும் உணர்வுகள் துளிர்த்திடும்
உதித்திடும் காலையின் விழிப்பினில்
ஊற்றெடுக்கும் கவிதை பொங்கியே

எழுதாத பொழுதுகள் இருப்பதில்லை
என்னுடைய வாழ்க்கைப் பாதையில்
நிறைகின்ற குடமொன்று வழிவதுபோல்
நிற்காமல் சுரக்குமென்னுள் கவிதைகள்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan