” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்
வியாழன் கவிதை

பொங்கும் உளமே தங்கும் தையே
*********
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை அருளோடு
பானனையிலே பால்பொங்கி வழிய
புத்தரிசி போட்டு புதுப்படையல் படைத்து
மித்திரனுக்கு வணக்கம் மிகுக்கோடு செலுத்தி
உற்றார் உறவுகள் உணர்விலே ஒன்றாகி
சுற்றமும் சூழ சுவைத்து மகிழ்ந்து
பற்றுடனே பாரினிலே பைந்தமிழும் வளர்ந்திடவே
வற்றாத ஊற்றாகி வளர்த்திடும் தலைமுறை
தலைமுறையாய்த் தக்கவைப்போம் தைத்திருநாள் மகிமைகளை
நிலைகொள்வோம் நிம்மதி நிச்சயமே தைபிறந்தால்
வழிபிறக்கும் என்றேதான் வாழ்த்துகள் கூறிடுவோம்
வலிநீங்கி வசந்தம் வாழ்வினில் வீகட்டும்
பழிவாங்கும் எண்ணம் பறந்தோடிப் போகட்டும்
விழித்திருப்போம் வீண்வம்பு வேண்டாமே பொங்கட்டும்
உள்ளம் எல்லாம் உதயசூரியன் ஒளியினிலே
வெள்ளம்போல் பெருகட்டும் வளங்கள் எல்லாம்
தைமகள் தரணியில் தங்கிட வேண்டும்
பாமர மக்களும் பயன்களும் பெற்றிடவே!

கவிதைநேரத் தொகுப்பாளினிகட்கு நன்றி!
திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கும் நன்றி!
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள்
கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan