திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
உலகினில் போர்கள்
************************* உயிர்களை மாய்க்கும்
***************************
எண்சீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம் விளம் மா

பலமது வேண்டும் பாரினில் என்றும்
பலரையும் பகைத்திடா
பயனது பெறவே
நலமது ஓங்கும் நானிலம் சிறக்கும்
நசுங்கிடா துயிர்களும் நகர்ந்திடும் நாட்கள்
விலகிடும் சண்டை விரக்தியும் இல்லை
உலகினில் போர்கள் உயிர்களை மாய்க்கும்
உணர்ந்துமே உழைத்திட உயர்ந்திட லாமே!

துலங்குமே பூமி துவண்டிடும் மக்கள்
துன்பமும் துக்கமும் துரிதமாய் விலக
கலகமும் வேண்டாம் காடையர் போக்கு
களங்கமும் ஆக்கிடும் காசினி தன்னை
விலகிட வேண்டும் வீம்புடன் பேச்சு
வியர்வையும் வீணிலே விரயமும் ஆகும்
உலகினைக் காக்க உகந்ததாய்ச் செயல்கள்
உறுதுணை ஆக்கிட உழைத்திட வேண்டும்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading