” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

மாற்றம்!

ஆண்டுதோறும் மாற்றம் வேண்டும் என்று
அலட்டிக் கொள்கிறோம்
அவா படுகின்றோம்
கூண்டுக்கிளிபோல் அல்லாமல்
பூட்டுப் போட்ட நம் உள்ளத்தைத் திறந்தே
வெளிவருவோம்!
ஆவன செய்தல் ஆளுமை வளர்த்தல்
எதுவும் இல்லா வாழ்வில்
எங்கே காண்போம் மாற்றம்?
எண்ணத்தில் உதிர்த்து உணர்வில் கலந்து செயலாய் வடிவம் கொள்ளும்போது மாற்றம் நிகழும்!
மற்றவருக்காக மாறாமல் நமக்காக மாறுதல் வேண்டும்
எம்மை மாற்றுவோம்!
கற்றுக் கொள்ள நிறைய உண்டு
குற்றங்குறை காணாது
பற்றுதலோடு வாழ்ந்து
சுற்றமும் சூழ்ந்து களிப்பிலே கரைகண்டிட
ஏற்றங்கள் தேடி
மாற்றத்தின் திறவுகோல்களாக மாறுவோம்!

ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி! மிகுந்த வாழ்த்துகள்!
களம் தந்து உற்சாகமூட்டும் திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கு மிகுந்த நன்றி!
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள்!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan