மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்
திரு.நடா மோகன் அவர்களே!
திரு.ப.வை.ஜெயபாலன் அவர்களே!
மற்றும் பாமுக உறவுகளே!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
அன்பே ஆளும் சக்தியாகும்!

அறுசீர் விருத்தம்
சீர் வரையறை: மா மா காய்/ மா மா காய்

கீற்றுப் போல மிளிர்வாரே
கிழக்கில் உதிக்கும் சூரியன்போல்
தேற்றிக் கொள்ளல் வேண்டுமன்றோ
தேசம் காத்தல் நம்கடமை
ஆற்றல் உண்டு பாசமுடன்
அருகில் சென்று ஆற்றிடவே
ஊற்றாய் இதயம் இருக்கணுமே
உண்மை அன்பில் நிலைக்கணுமே!

பகிர்வோம் அன்பை மன்னுயிர்க்கே
பண்பில் உயர்ந்தே வாழ்ந்திடுவோம்
சகிப்புத் தன்மை கொண்டிடுவோம்
சமமே எல்லா உயிர்களுமே
மகிமை தானே மாந்தருக்கே
மண்ணில் பெருமை அடைந்திடலாம்
அகிலம் எங்கும் சமரசமே
அன்பே ஆளும் சக்தியாகும்!

ப.வை.அண்ணா உங்கள் பணி போற்றுதற்குரியது.
மிகுந்த வாழ்த்துகள்!
திரு.நடா மோகன் அவர்களே களம் தந்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading