சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சத்தி சத்திதாசன்

மெல்ல வீசும்
மாலைத் தென்றல்
இனிமை பூசும்
எந்தன் மீதே
சிந்தும் வாசம்
மல்லிகை மலரில்
நெஞ்சில் நேசம்
மெல்லெனப் பூக்கும்

நிலவின் குளிரில்
சில்லென விரியும்
அல்லி மலரின்
மென்மை நினைவை
வருடும்
பெளர்ணமி வெளிரில்
பசுமைத் தரையில்
இரவில் பலரின்
இதயங்கள் விழிக்கும்

விழிகளை மூடிக்
கனவினில் மூழ்கி
வழிகளைத் தேடி
விளிம்பினில் வாழ்க்கை
வருடங்கள் ஓடி
அகவைகள் கூடி
நிகழ்வினைப் பாடி
நிஜமொரு புலம்பல்

காற்றினிலே ஒரு கீதம்
கேட்டிடும் நேரம்
பாட்டினிலே ஒரு வருடல்
தேடிடும் வேளை
நேற்றினிலே நான்
சுவைத்திட்ட கரும்புகள்
வேற்றினிலே இனிக்
காண்பதில்லை உறவுகள்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading