” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

வேள்ளி
^^^^^^^^^^^
அன்றாடம் வேள்விகள் ஆங்காங்கே நடக்கின்றது
ஆகுதி போடாத யாகங்கள் தோடர்கின்றது
இகமதில் எத்தனையோ வேள்விகளைப் பார்த்தாச்சு
இலைமறை காயாய் இருப்பதுதான் பெரிதாச்சு
ஈனஸ்சுரத்தில் பாடும் காலமதில் நின்றே
ஈகையில்லாத வேட்கையும் பூண்டிங்கே
உருப்பட்டது எதுவும் இல்லை உலகிலே
ஊனமும் எத்தனையோ உருவாகியது பாரிலே
எட்டியும் பிடிக்க முடியாது என்றெண்ணி

வேகாத் தீயில் வேள்வியும் சங்கமிக்க

ஏனிந்தக் கோலமும் எப்படியோ மாறியது
ஒன்றாக மனங்களும் இணையாமல் நின்றே
ஓலமிடிணும் உணராய் உணராய் கானென்றே

அமைதியாய் வேள்விகள் அடுக்கடுக்காய் உருவாகின

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan