சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

பெண்ணே
பூங்கொடியே பொற்கொடியே புவிவிளங்க வந்த குலமகளே
கலைமகளே அலைமகளே மலைமகளே என்றும்
பாரதம் துலங்கிட வந்த மாதாவே
கற்பகதருவே மாசில்லா மணியே மலர்விழியும் நீதானே
முடிசூடிநின்று குடும்பத்தையாளும் பெண்ணவளும் நீதானே
வண்ணமாய் திண்ணமாய் வரமாய் வந்தவளே
கண்ணம்மா நீதானே எந்தன் செல்லம்மா என்றே போற்றியும் நிற்பாரே

நால்வகைக் குணமும் நான்மறையுணர்வும் கொண்டவள் பெண்ணே
கவிஞர்கள் வர்ணிக்கும் மாபெரும் தேவியம்மா
புன்னகையிருந்தாள் பொன்னகை தேவையில்லை என்பார்
சாதனை படைக்கும் சரித்திரமான சத்திய நெறியும் கொண்ட
வேதனை தீர்க்கும் வேதசொரூபியும் பெண்ணே
பெண்ணே பெண்ணே என்றும் பெருமைக்கு உரியவளே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan