” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

ஊக்கம்
^^^^^^^^^^^

ஊக்கமது இல்லையேல்
ஆக்கமது இல்லையே

உணரவில்லையேல் விழிப்பும் இல்லையே பாரில்

தெளிவோடு சிந்தனையும் சிதறாமல் பெருகிவிட

கனிவாக நற்காரியமும் கருத்தோடு தேறிடவும்
கல்விக்கு தேவை ஊக்கம்
வாழ்விற்கு தேவை ஊக்கம்
உண்மைக்கு தேவை ஊக்கம்
உயர்வுக்கு தேவை ஊக்கம்

ஊனமில்லாதது உழைப்பின் நிலையும்
உறுதி கொண்டால் வெற்றி நிச்சயம்

மாற்றமில்லாத மனிதனின் முயற்சி

ஆளுமை கொண்டது அதிகாரத் தோற்றம்

மாண்பு கொண்டது மானிடப் பிறப்பு
வீண்புகழ் இல்லையே ஊக்கம் இருப்பதும்
காண்புகழ் சிந்தக் கொள்ளுவாய் ஊக்கம்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan