28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சாமினி துவாரகன்
இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது…
போர்வையை
விலக்க மனமின்றி
இறுக்கிப் போர்த்து
படுத்திருந்ததும்…
தண்ணீரை
அள்ளிக் குளிக்க
மனமின்றி
அரைமணி நேரமாய்
அலாசிக்கொண்டிருந்ததும் …
வழி ஓரம் கிடக்கும்
புல் நுனியில்
படர்ந்திருக்கும்
பனித்துளிகளை
தொட்டு இரசித்ததுவும்…
இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது…
சிவராத்திரிக்கு
கண் விழித்ததும்
மக நட்சத்திரத்தில்
மண் தொட்ட மாமனுக்கு
விஷேச அர்ச்சனை செய்ததும்…..
இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது….
குறை மாதக்
குழந்தையே!
இன்னொன்றும்
ஞாபகம்
இருக்குறது…
அசடு வழியும்
காதலர்கள்
அடிக்கடி புலம்பும்
அந்த வார்த்தை
மாசி 14…..
-சாமினி துவாரகன் –
2025.02.04
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...