இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

சாமினி துவாரகன்

இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது…

போர்வையை
விலக்க மனமின்றி
இறுக்கிப் போர்த்து
படுத்திருந்ததும்…

தண்ணீரை
அள்ளிக் குளிக்க
மனமின்றி
அரைமணி நேரமாய்
அலாசிக்கொண்டிருந்ததும் …

வழி ஓரம் கிடக்கும்
புல் நுனியில்
படர்ந்திருக்கும்
பனித்துளிகளை
தொட்டு இரசித்ததுவும்…

இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது…

சிவராத்திரிக்கு
கண் விழித்ததும்
மக நட்சத்திரத்தில்
மண் தொட்ட மாமனுக்கு
விஷேச அர்ச்சனை செய்ததும்…..

இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது….

குறை மாதக்
குழந்தையே!
இன்னொன்றும்
ஞாபகம்
இருக்குறது…

அசடு வழியும்
காதலர்கள்
அடிக்கடி புலம்பும்
அந்த வார்த்தை
மாசி 14…..

-சாமினி துவாரகன் –
2025.02.04

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading