அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே!

நகுலா சிவநாதன்

சாளரத்தின் ஒளியினிலே!

சாளரத்தின் ஒளியினிலே
சந்தணக்காற்று வீசுகையில்
சாரல் மழையோசையில்
சாதனைகள் தோன்றுதே!

காதல் ராகம் பாடுதே!
கன்னித்தமிழ் மேவுதே!
மோதல் வந்து முத்தமிட
மோகனங்கள் பேசுதே!

தென்றல் வந்து சேதிசொல்ல
தென்னங்கீற்று வாசம் வீச
மன்றம் மகிழும் கிளுகிளுப்பு
மங்கை மனதை மாற்றுதே!

கன்னல்மொழி பேசிடவே
காந்தள் பூவும் மலர்ந்திடவே
பெண்ணே நீயும் பெருமை கொள்ள
பேசாயோ இந்த ஒளியினிலே

கண்ணில் ஒளி தெரிகையிலே
காவியங்கள் பாடுகையில்
கதிரவனின் காலையொளி
களிப்புடனே மயக்குதெம்மை

நகுலா சிவநாதன்1778

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading