பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே!

நகுலா சிவநாதன்

சாளரத்தின் ஒளியினிலே!

சாளரத்தின் ஒளியினிலே
சந்தணக்காற்று வீசுகையில்
சாரல் மழையோசையில்
சாதனைகள் தோன்றுதே!

காதல் ராகம் பாடுதே!
கன்னித்தமிழ் மேவுதே!
மோதல் வந்து முத்தமிட
மோகனங்கள் பேசுதே!

தென்றல் வந்து சேதிசொல்ல
தென்னங்கீற்று வாசம் வீச
மன்றம் மகிழும் கிளுகிளுப்பு
மங்கை மனதை மாற்றுதே!

கன்னல்மொழி பேசிடவே
காந்தள் பூவும் மலர்ந்திடவே
பெண்ணே நீயும் பெருமை கொள்ள
பேசாயோ இந்த ஒளியினிலே

கண்ணில் ஒளி தெரிகையிலே
காவியங்கள் பாடுகையில்
கதிரவனின் காலையொளி
களிப்புடனே மயக்குதெம்மை

நகுலா சிவநாதன்1778

Nada Mohan
Author: Nada Mohan