சாளரத்தின் ஒளியினிலே……!!

சாந்தினி துரையரங்கன்

எம்வீட்டு சாளரத்தின்
திரையை விலக்கியதும்
சூரிய கதிர்கள் என் முகத்தை தழுவினவே ……
மெல்ல சாளர கண்ணாடியை திறந்ததும் …..
ஒட்சிசன் ஓடி
உள்ளே நுழைந்து
கரியமில வாயுவை
விரட்டி விரட்டி ஓட்டியதே …
என்னை தழுவி
உள் வந்த ஒளி
மனதின் புத்துணர்வை
எழுப்பி சென்றதே…
வீட்டின் இருளை விலக்கி
சின்ன தூசு துகள்களையும் இனம் காட்டியதே…..!!

Nada Mohan
Author: Nada Mohan