திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1701!
என் வகுப்பறை
ஆளுமைகள்!🙏

புரியாத வயது தொட்டு
…புரிகின்ற வயது வரை
மழலையின் ஆரம்பம்
….கண்டு இற்றை வரை
மனதோடு நிலைத்த
….மறப்பற்ற வரமாம்
தொடர்கிறது வகுப்பறை ஆளுமைகள் இன்னும்
வரம்பற்ற தேடலின் விதியாய்!

எழுத்தைக் கற்றது முதல்
எண்ணத்தைப் பகிர்வது வரை
பரீட்சை வசப்பட்டது முதல்
பக்குவம் வந்தது வரை
சுயமாய்ச் சிந்திக்க கற்றது தொடக்கம்
சுதந்திரமாய்ப் பகிர்வது வரை
ஏற்றி வைத்த ஏணிகள்
எம் வகுப்பறை ஆளுமைகள்!!

பொறுமை அன்பு பண்பு
ஒழுக்கம்
பேச எழுத வாசிக்க நேசிக்க இன்னும்
கற்க கற்பிக்க தெளிய
தேனாய்த் திகட்ட
தேட அறியப் பகிர இன்னும்
இன்னுமாய்
முன்னே சென்று முயன்று கற்றுப்
பின்னே வந்த நமக்குள்
விதைத்த வீரியங்கள்
எம் வகுப்பறை ஆளுமைகள்!!

நன்றியோடு நாளும் நினைப்பதும்
நல்ல நூல்களாய்
..நேசிப்பதும் அவர்
காட்டிய பாதையில்
பயணிப்பதும்
தந்ததை அடுத்த
சந்ததிக்கு அருள்வதும்
நம் கடமையாம் அதுவே தான்
வகுப்பறை ஆளுமைகளுக்கு
நாம் அளிக்கும் மகிழ்வாகும்!
சிவதர்சனி இராகவன்
5/10/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading