மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு216

நீர்க்குமிழி
நிற்கும் நீரோடு கொட்டும் நீர்சேர
உற்பத்தியாகும் நீர் குமிழி
சற்று நொடிக்குள்ளே சட்டென்று
உடையும்
கற்றுத்தரும் பாடம்
உடலும்
காற்றுப்போனால் வெறும்
சடலம்…
பித்து பிடித்து நித்தம் ஏதோ எதோ
சத்தென்று உண்டு கொழுக்க
சட்டையிலும் பட்டு உடுக்க
செத்த பிணமானால் கெட்ட மணம் வரும்
எட்டி போவார் உற்றம் சுற்றம்
இதை எண்ணாமல் அடிக்கிறார் கொட்டம்
புண்ணியம் பாவம் என்கிறார் உயிர் கொன்று வெந்து வேக வைத்து தின்ன
நன்று இது இந்த நாநில உயிர்களே
ஒன்றை ஒன்று கொன்று உண்ண
மன்றில் நின்றாடும் சிவன் படைப்பென்ன
ஒன்றும் புரியாது உண்மை தெரியாது
ஊனை உண்பார் பல கோடி
பாவம் மோடி
சீர் எது சிறப்பெது செய்வது எதை என்று
சிந்தித்து செயற்பட லாமோ
குற்றம் ஆமோ
நீரின் குமிழி போல் வாழ்க்கை இதில் ஏன் நின்று நிதானிக்க நேரம் நீ
சரியென எண்ணினால் செய்து வாழ் வாழும் நாள் சிறு வட்டம் என எண்ணி பாரும்.சிறப்பாய் அதை வெல்ல பாரும்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading