திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு216

நீர்க்குமிழி
நிற்கும் நீரோடு கொட்டும் நீர்சேர
உற்பத்தியாகும் நீர் குமிழி
சற்று நொடிக்குள்ளே சட்டென்று
உடையும்
கற்றுத்தரும் பாடம்
உடலும்
காற்றுப்போனால் வெறும்
சடலம்…
பித்து பிடித்து நித்தம் ஏதோ எதோ
சத்தென்று உண்டு கொழுக்க
சட்டையிலும் பட்டு உடுக்க
செத்த பிணமானால் கெட்ட மணம் வரும்
எட்டி போவார் உற்றம் சுற்றம்
இதை எண்ணாமல் அடிக்கிறார் கொட்டம்
புண்ணியம் பாவம் என்கிறார் உயிர் கொன்று வெந்து வேக வைத்து தின்ன
நன்று இது இந்த நாநில உயிர்களே
ஒன்றை ஒன்று கொன்று உண்ண
மன்றில் நின்றாடும் சிவன் படைப்பென்ன
ஒன்றும் புரியாது உண்மை தெரியாது
ஊனை உண்பார் பல கோடி
பாவம் மோடி
சீர் எது சிறப்பெது செய்வது எதை என்று
சிந்தித்து செயற்பட லாமோ
குற்றம் ஆமோ
நீரின் குமிழி போல் வாழ்க்கை இதில் ஏன் நின்று நிதானிக்க நேரம் நீ
சரியென எண்ணினால் செய்து வாழ் வாழும் நாள் சிறு வட்டம் என எண்ணி பாரும்.சிறப்பாய் அதை வெல்ல பாரும்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading