சிவரஞ்சினி கலைச்செல்வன்

தலைப்பூ சந்தம் சிந்தும். சந்திப்பு. 233. “உச்சி வகிடெடுத்து
ஓர மயிர் பின் இழுத்து
அச்சொட்டா அம்மா
அழகாக பின்னஇவிட
நிறைய பூ தலை சொருகி
நெற்றியிலே பொட்டு வைச்சு
கரை வச்ச பாவாடை
கால் கொலிசில் சரசரக்க
பட்டாடை பள பளக்க
தோட்டோடை களுத்தணியாய்
தொங்கும் முத்து மாலை
தெருவிலே அம்மா கூட
திரிந்த காலம் அது
தெரிந்தோர் என் அழகை
திகட்டு தென்று ,
கண்ணூரு
எரித்து கழிஎன்பர்
என் அம்மா எனை அணைப்பா.
பூவும் இல்லை
பொட்டுமில்லை
தாவி நரை மயிர்கள்
தளருகிற வயது இது
கன்னி பருவத்தை
களிப்பாய் கழித்தேனே!”
.சிவரஞ்சினி கலைச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading