இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

தலைப்பூ சந்தம் சிந்தும். சந்திப்பு. 233. “உச்சி வகிடெடுத்து
ஓர மயிர் பின் இழுத்து
அச்சொட்டா அம்மா
அழகாக பின்னஇவிட
நிறைய பூ தலை சொருகி
நெற்றியிலே பொட்டு வைச்சு
கரை வச்ச பாவாடை
கால் கொலிசில் சரசரக்க
பட்டாடை பள பளக்க
தோட்டோடை களுத்தணியாய்
தொங்கும் முத்து மாலை
தெருவிலே அம்மா கூட
திரிந்த காலம் அது
தெரிந்தோர் என் அழகை
திகட்டு தென்று ,
கண்ணூரு
எரித்து கழிஎன்பர்
என் அம்மா எனை அணைப்பா.
பூவும் இல்லை
பொட்டுமில்லை
தாவி நரை மயிர்கள்
தளருகிற வயது இது
கன்னி பருவத்தை
களிப்பாய் கழித்தேனே!”
.சிவரஞ்சினி கலைச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading