இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 239 “ஆறு மனமே”
எப்படி மனம் ஆறும்
ஏராளம் கவலை மனதோடு
அறுபத்தி ஆறு அகவைக்குள்
அடங்கா கவலை மனதுக்குள்
ஆறு ஏழு தலைமுறையாய்
ஆச்சி வம்ச சீதனமாய்
ஆறு அறை வீடு
நாற்சார் வீடு நடு முற்றம்
போச்சு எல்லாமே
போராலே குண்டடியால்
கட்டிலோடு ஆச்சியை
கடசி மகளோடு விட்டு
இயக்கம் பிடித்து இருந்த இல்லம் .
போர் முடிந்து போக முன்னர்
பொலீசு நடேசு குந்தி
உறுதி தன்பேரில்
உள்ளதெண்டு வாதாட்டம்
இரு பார் எடு வருமானம் என்டு
இலண்டன் மகள் சொல்லி
பழுதுகளை சரி பாக்க பணம் அனுப்ப
காணி வீடு தன்ரை எண்டு
கணக்கு விடுகின்றான்
அதிகாரி ஆதரவு அவன் பக்கம்
தொலைஞ்ச உறுதியை எடுக்க அலைஞ்சு திரியிறன் கந்தோர் கந்தோராய்.
கனடாவால் வரப்போக
கனக்க செலவாகும்.
அக்கம் பக்கம் எல்லாம்
ஆராரோ புதுச்சனங்கள் .
எப்படி வாழ்ந்தம்
நாடு மீட்பமெண்டு
நம் பொடியள் செத்துதுகள்
வீடும் போய் நாடும் போய்
காடு போற வயது
கரைச்சல் தலைவிதியோ?
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading