திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பி161 பெருமை
உடையார் பரம்பரை
ஊரில் தலை முறை தலைமுறை
வழியாய் வந்த எம் வம்சம்
வழி இன்றி அலைகுது எங்கும்
மெத்தை வீட்டை போரில்
ஒற்றை கூரையும் இல்லாமல் செய்தது பொம்பர் குண்டு
மெத்த பரந்த காணி வயல் தோட்டம் இன்னும்
பற்றை காடாய்
ஆமி பிடித்த காணி மீளுது
அயல் உறவு பாவி பிடித்த
வயல் காணி இன்னும் வழக்கில்
செம்பு தண்ணி முதல்கை பரம்பரை
அண்டி வாழ்ந்த குடிகளில் கட்டி அழகாய்வாழுது
கனடாவில்
சாதி சனம் குடிப்பெருமை பரம்பரை பேர்
ஊரில் சாதித்ததை
காசு பணமே காட்டுது இன்று பெரிசாய்
வள்ளம் ஒருநாள் ஓடத்தில் ஏற
வள்ளத்தில் ஒருநாள் ஓடம் ஏற
பெருமை,சிறுமை எல்லாம்
ஒருநாளில் மாறும் நிலமை
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading