சிவரஞ்சினி கலைச்செல்வன்

மேன்மை மிகு மகாராணி நாட்டின் பண நோட்டுகளில் நான் உம்மை முதல் கண்டேன்
பாட்டன் வழி அரச பரம்பரைக்கு
வாரிசென
தோற்றம் எடுத்தவரே
வாட்டம் மனதிலுண்டு
வாழ்விழந்த தமிழர்களாய்
ஆண்ட தமிழ் அரசர்களை
அழித்து ஆண்டு போகையிலே
காட்டாச்சி சிங்களவர் கையில் எம் நாடு செல்ல
காரணமாய் இருந்த வம்சம்
என்று எண்ண மனம் கனக்கும்
என்றாலும் உங்களுக்கு
நன்றி சொல்ல வேண்டும்
நாட்டுக்கு சுதந்திரத்தை தந்தவர் நீர் என்று
தாயே விடை தந்தோம்
விண்ணிலே அமைதி பெற வேண்டி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading