சிவராத்திரி (704) 27.02.2025

Selvi Nithianandan

சிவராத்திரி

சிவனுக்கு உகந்ததாய்
பக்தர்களுக்கு ஏற்றதாய்
மாசிமாதத்தில் சிறப்பாய்
வருமே சிவராத்திரியாய்

ஆதியும் அந்தமும் இல்லாது
அரும்பெரும் சோதி வடிவானது
அடியவர் விரதம் தூய்மையானது
ஆண்டவன்அருள்நிலையானது

i:தூக்கம் தனை மறந்து
தூங்காது கண்விழித்து
பால் பழம் உணவாய்
பக்தியாய் ஓர்இரவாய்

நமசிவாய மந்திரத்தை
நாவார உச்சரித்து
நற்பேறு பெற்றிடவே
நல்இனிய சிவராத்தி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading