கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

புலவி வருவது தமிழே..!

தமிழே தமிழின் அருட்ச் சுவையே
தாகம் தீராத மறத்தின் தமிழே
தலையும் வணங்கும் தமிழே மணக்கும்

தனித்துவச் சிறப்பு எய்வதும் தமிழே

பாரம்பரியமான பைந்தமிழ் சுடரே

பணபாடும் பாரதி கண்டதும் தமிழே
பொய்யாமொழியார் சொன்னதும் தமிழே

ஒளவை மொழியும் அழகு தமிழே

கம்பன் கொட்டியதும் கனிந்த தமிழே

கலிங்கம் கட்டி ஆண்டதும் தமிழே

முத்தமிழும் பொங்கியது புனிதத் தமிழே

மூவுலகும் போற்றும் முத்தான தமிழே

மஞ்சள் பூசியும் வரவில்லை மரபுத்தமிழ்

மாற்றான் மடியிலும் பிறக்கவில்லையே தமிழ்

மான்புடன் சிறந்தது வீரத்தின் தமிழே

சிந்தையில் ஊறியது சிங்காரத் தமிழே

சிந்தனையைத் தூண்டுவதும் செந்தமிழ் அன்றோ

பஞ்சம் இல்லையே பாரதத் தமிழிற்கு

பொங்கு தமிழே புலவிவரும் தமிழே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading