பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

சிறுமை கண்டு பொங்குவாய்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பழமையை மறந்தனர் பண்பாட்டை இழந்தனர் //
பாசத்தைத் துறந்தனர் பணத்தாசை பிடித்தனர் //
நேர்மையற்ற உழைப்பு நிதானமற்ற செய்கை //
வேலையற்ற திண்டாட்டம் வேதனையும் படுத்துதல் //
கூலிக்கு மாரடிக்கும் கூட்டமும் உருவாகின //
வேலிச்சண்டையும் வல்லடி வழக்கும் //
கொள்ளியும் வைக்கமாட்டேன் என்சொத்தை தாவென்பதும் //

சிறுமைகள் சீறும்பாம்பாய் சிகரம் தொடும் காலமையா //
சிறுமையான செயலிலே பெருமைகொள்ளும் உலகம் //
சிறுமையைக் கண்டு பொங்கும் நெஞ்சம் //
மெளனமாக போகும் காலமும் உருவாகியது //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading