சிவரூபன் சர்வேஸ்வரி

நம்பிக்கை
ஃஃஃஃஃஃஃஃ
ஆனந்தம் கொள்ளுதடி ஆசையிலே மனமும் இனிக்குதடி //
தாவிவரும் மேகமே தாய்நாடு அறியவைத்து //
மேவியும் நின்றிடவே மேன்மையும் சேர்த்துவிடு //

நம்பிக்கை என்பது நடமாடும் தெய்வம் //
நம்பியவர் கெட்டதும் இல்லையே ஒருநாளும் //
இலட்சியப் பாதையும் வெற்றியை அடையவைக்கும் //
நிம்மதி வாழ்வும் நித்தமும் வந்திடுமே //
சத்திய வரத்தை சாதனையாக ஏற்று //
பற்றியே நிற்பதும் பரமனின் அருளினால்//
எத்துயர் வந்தாலும் எரிமலை குமுறினாலும் //
இத்துயர் தீரும் என்றதே நம்பிக்கை //
காலமும் உணர்த்தும் கடமையும் சிறக்கும் //
நேரமும் கூடிவரவே நல்லதும் நடக்கும்//

பாரமில்லை என்றே பண்போடு மிளிரவேண்டும் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan