சிவரூபன் சர்வேஸ்வரி

வருமா வசந்தம்
ஃஃஃஃஃஃஃஃஃஃ

வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லவே வசந்தம்//
வண்ணமாக ஓடவைப்பதே வரம்போடு நிற்பது //

ஏக்கத்தை விட்டே ஊக்கத்தை ஏற்படுத்து //

தாக்கமும் இல்லை தளராது கிடைக்கும் //

நோக்கமும் மாறாது நோன்பாக இருந்தால் //

வாக்கும் தப்பாமல் வருமே வசந்தம் //

தீர்க்கும் தீர்வு தினமும் நேரும் //
பார்க்கும் விழியில் பாவம் ஓடும் //
ஏற்கும் பணியில் ஏற்றம் சிந்திடவும் //
பூக்கும் மலரும் புனிதமும் பெறுமே //

காக்கும் கண்ணன் கடமையைச் செய்வான் //
காலமும் உன்னை வாழ்த்தியும் நிற்க்குமே //

சிவருபன் சர்வேஸ்வரி
✍🌸💐🌞

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading