சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

தலையீடு

அறம் மறம் முறமையோடு
அளவளாவி நிற்பதற்கு-ஒரு
கட்டான கோட்பாட்டை- அங்கு
கலங்கமின்றிக் கொண்டு போக
நல்ல தலையீடு முகாமத்துவம்
தனித்துவமாய் மிளிருமானால்
தயங்காது நீ நின்று தலையீடு நன்றே

வெளி மயக்கங்களுக்கு மயங்கி- இங்கு
வெட்டியாய் திரியும் மனிதர்
போதைகளிற்குகள் புகுந்து விளையாடி
வீண்-நெறிகெட்டகெட்ட வாழ்வுகளில் ஊறி
வன்முறை அடிதடியென்று
கண்ணியம் இல்லாமல் போகும் பாதையில்

கடமையுடன் நீ கைப் பற்றி வழியேக வைப்பாயானால் அது
ஒரு பெரும் தலையீடு

குறிப்பறிந்து செயற்பட்டு -நீ
குழுமி நின்று வழி சொல்லி- அங்கே
குற்றமொன்றும் தோன்றாமல்
உன் தலையீடு தானதற்கு
இடமளித்து செயற்படு
இடரில்லாமல் வழிநடந்து
இருள்களை நீயகற்றினால்
அதுதான் தனித்துவமான
தலையீடு.

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan