” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_156

“விடுமுறை”

விடுமுறை விடுமுறை
கோடை விடுமுறை
கூடி கும்மாளித்த விடுமுறை!

நான்கு நாள்
மச்சாள் சமையல்
நாவூற சாப்பிட்டு மகிழ்ந்தேன்
நாலு பாத்திரம் தேய்த்து கழுவினான் தம்பி
நான்கு மெசின் உடுப்பு தோய்த்து வெயிலில் காயவிட்டார் கணவர்!

சுவைக்கு சுவை சேர்க்கும் கேக் செய்தாள் குட்டிமகள்
வீடு கூட்டி பெருக்கினார்கள் என் ஆண்வாரிசுகள்!

காரசாரமான
கடலுணவு
காரல் மீன் குளம்பு
காத்திருந்து பாத்திருக்க
சமைத்தாள் மருமகள்
சுவைத்து உண்டோமே!

ஊர்கூடி உறவு கூடி
நிலா பாத்து
பட்டகதை உற்றகதை பேசி
கொத்துரட்டி கொத்தினான் பொறாமகன்
காரசாரமாய்
உறைக்க உறைக்க
உண்டு மகிழ்ந்தோம்!

வெப்பத்தை
தணிக்க
ஆற்றங்கரை சென்றோமே
அலாதிம்பிரியத்துடன்
காத்து வாங்கினோமே
கலகலப்பாய் பேசி குளிர்பானம்
குடித்தோமே!

அடுத்த
சந்ததியும்
ஆலாதிப் பிரியத்துடன்முற்றத்து வெயிலில்
ஆடிபாடி கதைத்து மகிந்து விடுமுறை கழிந்தது
மகிழ்வும் வந்தது!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan