” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த சிந்தும்
சந்திப்பு _170
“உயிர்கொடை”
நமக்காக
நம் மொழிக்காக
தம் இன்னுயிர்களை ஈகம் செய்த
தியாக செம்மல்கள்

தாம் வாழவிட்டாலும் தம் இனம் வாழ
தம்மை அர்பணித்த
தியாக தீபங்கள்

சாவுக்கு அஞ்சாத
சத்திய வான்கள்
நித்திய சீலிகள்
புறமுதுகு காட்டாத

புறநானுற்று
வீரர்கள்

இளமைக் கால கனவுகளை
எல்லாம்
எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்
எறி கணைக்குள்
எரி மலையாய் வெடித்தவர்கள்

குண்டு மழையில் நனைந்து
குருதி சிந்திய
உயிர்கொடை உன்னதமானது
உலகம் வியக்குது
தமிழினம்
தவிக்குது
வீரம் தெறிக்குது!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
23.11.24

Nada Mohan
Author: Nada Mohan