நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த சிந்தும்
சந்திப்பு _170
“உயிர்கொடை”
நமக்காக
நம் மொழிக்காக
தம் இன்னுயிர்களை ஈகம் செய்த
தியாக செம்மல்கள்

தாம் வாழவிட்டாலும் தம் இனம் வாழ
தம்மை அர்பணித்த
தியாக தீபங்கள்

சாவுக்கு அஞ்சாத
சத்திய வான்கள்
நித்திய சீலிகள்
புறமுதுகு காட்டாத

புறநானுற்று
வீரர்கள்

இளமைக் கால கனவுகளை
எல்லாம்
எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்
எறி கணைக்குள்
எரி மலையாய் வெடித்தவர்கள்

குண்டு மழையில் நனைந்து
குருதி சிந்திய
உயிர்கொடை உன்னதமானது
உலகம் வியக்குது
தமிழினம்
தவிக்குது
வீரம் தெறிக்குது!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
23.11.24

Nada Mohan
Author: Nada Mohan