” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_178

“பங்கு நீ”
பங்கு நீயில் பிறந்தாய்
பங்கு தாரராய் வந்தாய்
பண்பு உள்ள உத்தமனே
பாசமும் நேசமும் உன்னுள்!

உனக்கென நானும்
எனக்கென நீயும்
உறவாடி மகிழ்ந்தோம்
உரிமையுடன் கைபிடித்தோம்!

இனணயாய் துணையாய்
துணை நின்றாய்
இணைபிரியா நண்பனே
தோள் கொடுக்கும் தோழனே
தூணாக எமை தாங்குகின்றாய்!

நீ பாதி நான் பாதி
பாதி அப்பிள் சாப்பிட நீ வேணும்
மாதுளைக்கு முத்தெடுக்க நான் வேணும் உன்னருகில்
நானில்லையென்றால் நீ எது!

சிலநேரம் சண்டை
முழு நேரம் காதல்
பல மணி நேரம் பேசி
நேரத்தை மறந்து வாழ்வோம்!

மாறாத மனதோடு
மறக்காத நினைவோடு மறையாத காதலனே நீ!

நன்றி வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
08.02.25

Nada Mohan
Author: Nada Mohan